search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னேரி போலீஸ்"

    பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பெரவள்ளூரை சேர்ந்தவர் ராஜா. வக்கீல். இவர் வக்கீல்களுடன் பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு சென்று பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளில் சென்னை கிண்டியில் அவருக்கு மரியாதை செலுத்திய பின்னர் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா அளித்த பேட்டியின்போது, தந்தை பெரியார் தேச துரோகி என்று கூறியுள்ளார்.

    தீண்டாமை, பெண் விடுதலை, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய பெரியாரை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக வழக்கறிஞர் ராஜா தெரிவித்தார்.

    ×